11 தன்னம்பிக்கை கவிதைகள் - Best Tamil Motivational Quotes - Antony Kavithaigal
என்னுடைய முதல் 11 தன்னம்பிக்கை கவிதைகள் உங்களுக்காக...
உங்களுக்கு இந்த கவிதை புடிச்சு இருந்தால், மற்றவர்களுக்கு அனுப்புங்கள்...
1. பயணம்...
முன்னால் இருக்கும்
பாதை
யாருக்கும் தெரியாது....
அப்படிதான் வாழ்க்கையும்....
துணிந்து செல்...
பாதை உண்டு என்ற
நம்பிக்கையில்...
2.பயணம்
வாழ்க்கை சொல்லி தருவது...
போய் கொண்டே இரு...
உன்னால் முடியும்வரை அல்ல...
உன் பயணம் முடியும்வரை...
3.நீர்
நீரை போல் இருக்க கற்றுக்கொள்
அனைவரின் தேவையாக..
நீயும் தேவை...
உன்னை நம்பி இருப்பவர்களுக்கு...
முன்னேறி செல்....
காலம் உனக்கு கை கொடுக்கும்...
4. வெள்ளை
பிடித்த நிறம் அனைவருக்கும். ..
கறை படும் பொழுது அல்ல...
நிறம் மாறாமல் இருப்போம்...
நிலை மாறும் உலகில்.....
அடுத்த நொடி வாழ்வோய் என்ற நம்பிக்கை கொடுக்கும்..
முதல் அலாரம் காலை விடியல்...
6.உண்மை
உண்மையாய் இரு.. உனக்காக
காத்திருப்பார்களுக்கு...
உண்மை கொல்லும் ஒரு நினைவை பொய்கள்....
உலகிற்கு உன்னை அறிமுகப்படுத்த உண்மை மட்டும் போதும்...
நல்ல உறக்கம் வர என்றும் தேவை
உண்மை மட்டுமே....
7.துணிவு
உன்னை மதியார் முன்
முன் செல் துணிச்சலாக...
புது முயற்சி செய்...
உன்னை எள்ளி நகையாடியோர் ஓடும் படி....
8.வளர்ச்சி
பூவின் வளர்ச்சி அதன் மகரந்த பையில்..
உந்தன் வளர்ச்சி உன்னுடைய உழைப்பில்....
நிறம் மாறாமல் பெற்ற வெற்றி நிலைக்கும் என்றும் ...
9.செயல்
நீ நினைத்து கொண்டு இருக்கும் பொழுது...
ஒருவன் அதை செய்து முடிகின்றான்...
நினைப்பதை நிறுத்துங்கள்...
செய்ய செல்லுங்கள்...
10.உண்மை முகம்
மனிதனின் கண்ணை பொருத்து
நிலவின் மறைவும் வளர்ச்சியும் மாறும்...
ஆனால் நிலா என்றும் அதன் வடிவில் தான் இருக்கிறது...
அப்படியே நீயும்...
பார்க்கும் கண்ணுக்கு உன்னை மாற்றத்தே.....
உன்னுடைய நல் குணத்தில்
என்றும் நிலைத்திரு உண்மையாக!!!
11.குணம்
நல்ல பெயர் வைத்தால் பிள்ளைகள்
அவர்கள் போல வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கும் போது...
நல்ல குணங்களை பெயர்களாய் வையுங்கள்
உலகம் நல்ல எண்ணத்தால் வளரட்டும்...
Comments
Post a Comment
Thanks for Comment..