12 காதல் தோல்வி கவிதைகள் - Love failure quotes in Tamil - Antony Kavithaigal
தூரத்து நிலவு அழகு தான்...
இங்கிருந்து பார்க்கும் வரை....
அருகில் சென்று இணைந்தால்....
மூச்சு திணறி முடிகிறது வாழ்கை.....
புரிந்து கொள்கிறேன்....
சில நேரம் தூரம் மட்டுமே அழகு...
இணையாத இரு துருவங்கள்க காந்தத்தின் காதல்....
பிரிந்து கொண்டு ஒரு இடத்தில்..
இணைய வேண்டும் என்ற பேராசையோடு...
இமைகள் கண்ணை இரவு மூடினாலும்...
இனிய நினைவுகள் கொண்டு
காலையில் மீண்டு வருவேன் புது முயற்சி செய்ய....
சில நேரங்களில்
நடக்க போகும் நிகழ்வுகளை விட....
அதன் நினைவுகள் இன்னும் வலியை
அதிகம் தருகின்றன....
மனம் இல்லா மனிதர்களின்
உணர்வுகள் பேசும் வார்த்தைக்கு
கண்கள் பேசும் மொழிகள்
சில கண்ணீர் துளிகளாய்...
தூரத்து நிலவாக நீ....
உன்னை நோக்கி நான்...
வெளிச்சம் பார்த்து காத்திருக்கிறேன்....
என்னோடு எப்போது சேர்வாய் ...
ஒருவரின் மாறிய மனம் பேசும்போது....
கடந்த நாட்களின் வார்த்தைகள்
இன்னொரு மனிதனாய் இடை வருகிறது...
மாறிய மனத்தை இன்னும் காயப்படுத்த...
சேர் நினைக்கும் போதெல்லாம்
பார்த்து விட்டு செல்கிறேன்...
மீண்டும் உன்னை என் கண்கள் பார்க்கும் என்று...
சில நிலைமாறும் சூழ்நிலையில்
இரு மனம் உடைகிறது...
என் கண்கள் உன்னை தேடுகிறது...
நீயும் சிரிக்கிறாய் ...
அமைதியாய் உன் கண்களை மூடி கொண்டு...
ஓடும் நீரின் பாதையில்
இணைவோம் என்ற நினைப்பில்
கரங்கள் இணையும் நேரத்தில்....
பிரிகிறார்கள்
மீண்டும் ஓடும் நீரின் பாதையில்...
காத்திருக்கும் காலத்தை கவனிக்குறேன்
கனத்த இதயத்துடன்....
கண்கள் ஓரம் நீர்த்துளி மகிழ்ச்சியாக சில நேரம்...
கண்ணீராய் பல நேரம்....
உன்னை நோக்கிய பார்வையில்
உறைந்துபோய் நான்.....
உணர்வாக நீ இருக்கிறாய் உடல் இல்லமால்
உடல் கொண்ட நான் இன்று உணர்வில்லாமல் உன்
இழப்பால்..
இல்லாத உன்னை இருக்கின்றாய் என்றே
இன்றும் சொல்கிறது இந்த மனம்...
இருப்பதெல்லாம் இனிவேண்டாம்..
எங்கே என் இன்னொரு உயிரான நீ....
Comments
Post a Comment
Thanks for Comment..