15+ ஆணின் காதல் கவிதைகள் - Aanin Kathal Kavithaigal - Antony Kavithaigal
வழி எங்கும் உன் நினைவுகள்...
நீ நடந்து வந்த பாதை என்பதால்...
வலியுடன் நான்...
உன் வருகை யை எதிர்பார்த்து கொண்டு...
நீ தூங்கும் நேரத்தில்....
பிரிவு தாங்காமல்....
உன்னை தேடி
என் கனவுக்குள் நான் ....
நிலவின் செய்தியை கரை சேர்க்க...
முடிவில்லா முயற்சியுடன்
அலை இன்றுவரை.....
என்னோடு சேர்ந்து எதையும் கண்டு பயந்து ...
என்னை கைவிடாமல் இருக்கும் தேவதை...
துணைவியாய் மனைவி...
இதயம் திருடப்பட்டது என்னிடம் இருந்து
கண்களால் கைதும் செய்கிறாள்...
என் பார்வை இவள் மீது பட்ட குற்றத்திற்காக...
உன்னோடு உலகத்தில்
ஒன்றாக வாழ...
மாற்றுகிறேன்
என்னை உன்னை போல ..
இருப்பது நீயென்றால்
எந்த இடமும் இனிமையே....
என்னவனின் என்னில்
என்னை எடுத்தேன்....
அன்பான எங்களின் விதையாக
குடும்ப ஒளி இன்று என்னில்....
அடைத்து வைத்த ஆசைகளை
அவிழ்த்து விடுகிறேன்
குழந்தையாய் மாறி....
என்னவன் இவன்
என்று உணர்ந்து.....
உன்னோடு நான் இருப்பேன் என்றேன்
முதல் சந்திப்பில்....
காலம் சென்றாலும் என் வார்த்தை உன்னோடு...
துணையாக...
இந்த மலையின் உயரத்தை விட பெரிது
உன் மேல் நான் கொண்ட அன்பு...
உறைபனியின் தழுவல் போல்
உன்மேல் நான் ஒன்றாக ஒவ்வொரு நாளும்...
ஏக்கத்துடன் பனி துளிகள்
பகலவனை பார்த்து...
உன்னோடு உறவாட
அருகில் வா...
உன்னால் ஆவியாகி
மறுஜென்மம் பெற்று மீண்டும்
உன்னை காண...
உலகம் என்ன சொன்னால் என்ன...
பூமியின் மீது கொண்ட
தீரா காதலை கொட்டி தீர்க்கிறது மழை...
பூவின் அழகை ரசிக்க தெரிந்த சூரியன்...
தன் வெப்பம் பூவின் அழகை சிதைக்கும் என்று எண்ணி....
தூரமாக பார்த்து விட்டு செல்கிறது
ஒரு மன காதலுடன்....
உடன் பிறவா உடலும் மனமும்
இன்று என்னை பார்த்து கலங்குகிறது...
தன்னிலை மறந்து... மறைத்து...
என் நிலை உயர பணி செய்கிறாள்....
என்ன கொடுத்து ஈடு செய்வேன்..
மனம் சொல்கிறது என்னையே
கொடுக்கிறேன்...
உண்மையான அன்பு
உன்னுடன் கொண்டேன்....
கை கோர்த்து வா...
காலம் முடியும் வரை...
தாய்க்குப் பின் தாரமாக...
எனக்கு பின் நம்
அன்பு குழந்தைகளின் தாயாக....
என்னையே தெரியாமல் என்னை நம்பி
என்றும் என்னுடன் வரும் அன்பே....
உன் பாதங்கள்
தாங்க நான் இருப்பேன் என் உயிரே....
Comments
Post a Comment
Thanks for Comment..