20 தன்னம்பிக்கை கவிதைகள் - Motivational Quotes in Tamil with Images- Antony Kavithaigal
பழைய கஷ்டமான நினைவுகளை
தூக்கி போடுங்க...
இனிய நினைவுகள்
இனி உங்கள் கையில்...
இடம் தெரியாது பூத்த பூவே...
உன்னை கவனிப்பார் யாரும் இல்லையா...
உன்னை இன்னும் மெருகு படுத்து...
வருங்காலம் வளமாகும்....
கடந்து வரும் வாழ்கையில் மகிழ்ச்சியோ.. துயரமோ....
பாதை மட்டும் விலகாமல் நாட...
பாதை தருவது கடவுள் மட்டுமே...
நகர்ந்து போகும் நாட்களில்....
நமக்காக நிமிடங்களை நல்வழியில் கடந்து செல்....
பூவின் புன்னகையுடன்
புதிய வாழ்வை நோக்கி...
நான் ஒரு நிலா...
அனைத்து நிலையும் தாண்டி விட்டேன்...
சில நேரம் பசுமையாக...
பல நேரம் வெறுமையாக..
ஆனால் நான் இன்னும் பிரகாசமான இருப்பேன்....
கடக்கும் வாழ்கையில் தேவை பொறுமை மட்டுமே...
சில நேரம் வாழ்கையின்
தடைகள் பெரிதாய் தோன்றும்...
கொஞ்சம் பொறுத்து
நிமிடங்களில் எல்லாம் மாறும்
உன் நிலை உணர்ந்து...
உருவம் இல்ல நீர் போகிற வழியின் தடம் போல்
தன்னை மாற்றி...
சென்ற இடத்தில் பெறுகிறது அழகு
பெண்ணின் பெயர்கள்...
விழுகின்ற உன்னை
வெற்றிக்கு மாற்று... நீரை போல....
விழுந்த நீ மீண்டும் எழ
நீ மட்டுமே நினைக்க வேண்டும்..
வாழ்வின் கடினம் உடன் இருக்கும்
மனிதர்களை மாற்றும்..
உனக்கு மாற்றம் உண்டாக மாறாத
உன் மனதுடன் துணிந்து போராடு....
ஓடும் மேகங்களும் ஓரிடம் நிற்கிறது...
உன்னை கண்டு...
நீ அதற்கு மேல் வரும் போது...
வாழ்வின் எட்டாத தூரத்தை
விழியால் மட்டும் பார்த்து செல்லாதே....
செயலால் உன் வசம் ஆக்கு அதற்கு ஒரு படி மேலே சென்று....
எட்டாத தூரமும் உன் கால் கீழே...
உன்னை பின் தள்ளும்
தடையை எதிர்த்து...
உன்னுடைய ஒவ்வொரு காலடியையும்
உறுதியாக வை...
சிறு முன்னேற்றம் என்றாலும்
அது உனக்கு சொந்தமாகும்...
உன்னுடைய வளர்ச்சியும்
முழுமை ஆகும்
பார்க்கும் நிலவின்
முழு முகம் போல...
முழுமையான வாழ்கை
கை வசம் வர சில காலம்
காத்திருக்க வேண்டும்....
காத்திருந்தால்....
முடிவில் என்றும் அது அழகே...
உடலால் உறுதியாக நீ..
உள்ளத்தில் இல்லை நீ..
உன்னை புரிந்து கொள் நீ...
ஊருக்குள் என்ன சொன்னாலும்..
உன்னுடைய வலி உனக்கு மட்டுமே..
உழைப்பை மட்டும் நம்பு ...
உனக்கு உண்மையாக இரு...
உயர்வாய் ஒரு நாள் நீ.. பெண்ணே...,
கனவை நிஜமாக மாற்ற காத்திருந்தால்
காலம் மட்டுமே மாறுகிறது...
கனவு என்றும் கனவாகவே
இருக்கிறது...
நிஜமாக மாற்ற உழைத்திடு.....
உன்னால் முடியும் என்று
உனக்குள் நம்பிக்கை வரும்போது....
உடைந்து போன உன் உள்ளத்துக்கு சொல்... நேர் வழியில் நடந்து பழகு என்று.....
உன்னை வெல்ல யாரும் இல்லை...
இந்த உலகில்...
எறும்பை போல சுறுசுறுப்பாக இருக்க பழகி விடு...
தான் எடை விட அதிகம் சுமக்கும் பலசாலியாக...
எறும்பு ஊற கல்லும் தேயும்...
நீயும் செய்...
உண்மையான உழைப்பை மீண்டும் மீண்டும்..
மேலும் மேலும் வளர.
ஆர்ப்பரிக்கும் ஆழியில்
உருவாக்கும் அலைகள்....
கரை தொட்டதும்
அமைதியாகிறது...
உன் கவலைகளும் கஷ்டங்களும்
இப்படி பட்ட பிம்பங்களே...
ஒருவன் பணத்தால்
எல்லாம் சாதிக்க முடியும் என்றால்
அதனால் வீணாகுவது
பணம் மட்டுமல்ல
அவர்களுடைய
ஒழுக்கமும் தான்....
அழுத்தம் இல்லா அடிகள்
உன்னை
விழ வைக்கும் ...
வைக்கும் காலடிகளை இறுக வை...
கடல் அலைகள் அதை அழித்தாலும்
உன் பாதை மாறாது...
அவசரத்திலும்... ஆணவத்திலும்
முடிவு எடுக்காதே...
இரண்டுமே அழிவு தரும்
இரு தருணங்கள்…
கண்களை கவரும் பச்சை நிறமே
உன் இலையின் அழகிற்கு
நான் இல்லமால் போகிறேன்...
தாயின் முதல் குழந்தையின் பெருமையாக
உன் இலை எனக்கு...
வாழையடி வாழையாக வளர்ந்து வா....
நானும் உனக்கு துணை நிற்பேன்
நீராக அன்புடன்...
Comments
Post a Comment
Thanks for Comment..