Skip to main content

20 தன்னம்பிக்கை கவிதைகள் - Motivational Quotes in Tamil with Images- Antony Kavithaigal

20 தன்னம்பிக்கை கவிதைகள் - Motivational Quotes in Tamil with Images- Antony Kavithaigal 


பழைய கஷ்டமான நினைவுகளை 

தூக்கி போடுங்க...

இனிய நினைவுகள் 

இனி உங்கள் கையில்...


இடம் தெரியாது பூத்த பூவே...

உன்னை கவனிப்பார் யாரும் இல்லையா...

உன்னை இன்னும் மெருகு படுத்து...

வருங்காலம் வளமாகும்....


கடந்து வரும் வாழ்கையில் மகிழ்ச்சியோ.. துயரமோ....

பாதை மட்டும் விலகாமல் நாட... 

பாதை தருவது கடவுள் மட்டுமே...


நகர்ந்து போகும் நாட்களில்....

நமக்காக நிமிடங்களை நல்வழியில் கடந்து செல்....

பூவின் புன்னகையுடன்

புதிய வாழ்வை நோக்கி...


நான் ஒரு நிலா...

அனைத்து நிலையும் தாண்டி விட்டேன்...

சில நேரம் பசுமையாக... 

பல நேரம் வெறுமையாக..

ஆனால் நான் இன்னும் பிரகாசமான இருப்பேன்....

கடக்கும் வாழ்கையில் தேவை பொறுமை மட்டுமே...


சில நேரம் வாழ்கையின் 

தடைகள் பெரிதாய் தோன்றும்...

கொஞ்சம் பொறுத்து

நிமிடங்களில் எல்லாம் மாறும்

உன் நிலை உணர்ந்து...


உருவம் இல்ல நீர் போகிற வழியின் தடம் போல் 

தன்னை மாற்றி...

சென்ற இடத்தில் பெறுகிறது அழகு

பெண்ணின் பெயர்கள்...

விழுகின்ற உன்னை

வெற்றிக்கு மாற்று... நீரை போல....


விழுந்த நீ மீண்டும் எழ 

நீ மட்டுமே நினைக்க வேண்டும்.. 

வாழ்வின் கடினம் உடன் இருக்கும் 

மனிதர்களை மாற்றும்.. 

உனக்கு மாற்றம் உண்டாக மாறாத 

உன் மனதுடன் துணிந்து போராடு....


ஓடும் மேகங்களும் ஓரிடம் நிற்கிறது... 

உன்னை கண்டு... 

நீ அதற்கு மேல் வரும் போது...

வாழ்வின் எட்டாத தூரத்தை

விழியால் மட்டும் பார்த்து செல்லாதே....

செயலால் உன் வசம் ஆக்கு அதற்கு ஒரு படி மேலே சென்று....

எட்டாத தூரமும் உன் கால் கீழே...


உன்னை பின் தள்ளும்

தடையை எதிர்த்து...

உன்னுடைய ஒவ்வொரு காலடியையும் 

உறுதியாக வை...

சிறு முன்னேற்றம் என்றாலும் 

அது உனக்கு சொந்தமாகும்...


உன்னுடைய வளர்ச்சியும்

முழுமை ஆகும்

பார்க்கும் நிலவின்

முழு முகம் போல...


முழுமையான வாழ்கை 

கை வசம் வர சில காலம் 

காத்திருக்க வேண்டும்....

காத்திருந்தால்....

முடிவில் என்றும் அது அழகே...


உடலால் உறுதியாக நீ.. 

உள்ளத்தில் இல்லை நீ.. 

உன்னை புரிந்து கொள் நீ...

ஊருக்குள் என்ன சொன்னாலும்.. 

உன்னுடைய வலி உனக்கு மட்டுமே..

உழைப்பை மட்டும் நம்பு ... 

உனக்கு உண்மையாக இரு... 

உயர்வாய் ஒரு நாள் நீ.. பெண்ணே...,


கனவை நிஜமாக மாற்ற காத்திருந்தால்

காலம் மட்டுமே மாறுகிறது...

கனவு என்றும் கனவாகவே

இருக்கிறது...

நிஜமாக மாற்ற உழைத்திடு.....


உன்னால் முடியும் என்று 

உனக்குள் நம்பிக்கை வரும்போது....

உடைந்து போன உன் உள்ளத்துக்கு சொல்... நேர் வழியில் நடந்து பழகு என்று.....

உன்னை வெல்ல யாரும் இல்லை... 

இந்த உலகில்...


எறும்பை போல சுறுசுறுப்பாக இருக்க பழகி விடு...

தான் எடை விட அதிகம் சுமக்கும் பலசாலியாக...

எறும்பு ஊற கல்லும் தேயும்...

நீயும் செய்...

உண்மையான உழைப்பை மீண்டும் மீண்டும்..

மேலும் மேலும் வளர.


ஆர்ப்பரிக்கும் ஆழியில் 

உருவாக்கும் அலைகள்....

கரை தொட்டதும் 

அமைதியாகிறது...

உன் கவலைகளும் கஷ்டங்களும் 

இப்படி பட்ட பிம்பங்களே...


ஒருவன் பணத்தால் 

எல்லாம் சாதிக்க முடியும் என்றால் 

அதனால் வீணாகுவது 

பணம் மட்டுமல்ல

அவர்களுடைய 

ஒழுக்கமும் தான்....


அழுத்தம் இல்லா அடிகள்

உன்னை

விழ வைக்கும் ...

வைக்கும் காலடிகளை இறுக வை...

கடல் அலைகள் அதை அழித்தாலும்

உன் பாதை மாறாது...


அவசரத்திலும்... ஆணவத்திலும்

முடிவு எடுக்காதே...

இரண்டுமே அழிவு தரும்

இரு தருணங்கள்…


கண்களை கவரும் பச்சை நிறமே 

உன் இலையின் அழகிற்கு

நான் இல்லமால் போகிறேன்...

தாயின் முதல் குழந்தையின் பெருமையாக

உன் இலை எனக்கு...

வாழையடி வாழையாக வளர்ந்து வா....

நானும் உனக்கு துணை நிற்பேன் 

நீராக அன்புடன்...



Comments

Popular posts from this blog

11 தன்னம்பிக்கை கவிதைகள் - Best Tamil Motivational Quotes with Images - Antony Kavithaigal

11  தன்னம்பிக்கை கவிதைகள் -  Best Tamil Motivational Quotes - Antony Kavithaigal என்னுடைய முதல் 11 தன்னம்பிக்கை கவிதைகள் உங்களுக்காக... உங்களுக்கு இந்த கவிதை புடிச்சு இருந்தால், மற்றவர்களுக்கு அனுப்புங்கள்... 1. பயணம்... முன்னால் இருக்கும் பாதை யாருக்கும் தெரியாது.... அப்படிதான் வாழ்க்கையும்.... துணிந்து செல்... பாதை உண்டு என்ற நம்பிக்கையில்... 2. பயணம் வாழ்க்கை சொல்லி தருவது... போய் கொண்டே இரு... உன்னால் முடியும்வரை அல்ல... உன் பயணம் முடியும்வரை... 3.  நீர் நீரை போல் இருக்க கற்றுக்கொள் அனைவரின் தேவையாக.. நீயும் தேவை... உன்னை நம்பி இருப்பவர்களுக்கு... முன்னேறி செல்.... காலம் உனக்கு கை கொடுக்கும் ... 4.   வெள்ளை பிடித்த நிறம் அனைவருக்கும். .. கறை படும் பொழுது அல்ல... நிறம் மாறாமல் இருப்போம்... 5.  காலை பொழுது நிலை மாறும் உலகில்..... அடுத்த நொடி வாழ்வோய் என்ற நம்பிக்கை கொடுக்கும்.. முதல் அலாரம் காலை விடியல்... 6. உண்மை உண்மையாய் இரு.. உனக்காக காத்திருப்பார்களுக்கு... உண்மை கொல்லும் ஒரு நினைவை பொய்கள்.... உலகிற்கு உன்னை அறிமுகப்படுத்த உண்மை மட்டும் போதும்... நல்ல உறக்கம் வர என்றும் தேவ

Sentiment appa kavithaigal- Tamil Kavithaigal With Images - Antony Kavithaigal

Sentiment Appa kavithaigal  - Tamil Kavithaigal - Antony Kavithaigal Sentiment appa kavithaigal-  Tamil Kavithaigal  With Images பிறந்த பின் என்னை சுமந்தார்.... என் ஆசை கேட்டு அவர் ஆசை துறந்தார்... வரும் வாழ்க்கை இதுதான் என்ற  சிறந்த வழிகாட்டி என் தந்தை..... நான் தடுமாறும் நேரத்தில் என்னை  தாங்கினார்.... இன்று உங்கள் தடுமாற்றத்தில் நான் உடன் இருப்பேன் என் தந்தையே ...

12 காதல் தோல்வி கவிதைகள் - Love failure quotes in Tamil - Antony Kavithaigal

12 காதல் தோல்வி கவிதைகள் - Love failure quotes in Tamil - Antony Kavithaigal Best love failure quotes in Tamil தூரத்து நிலவு அழகு தான்... இங்கிருந்து பார்க்கும் வரை.... அருகில் சென்று இணைந்தால்.... மூச்சு திணறி முடிகிறது வாழ்கை..... புரிந்து கொள்கிறேன்.... சில நேரம் தூரம் மட்டுமே அழகு... இணையாத இரு துருவங்கள்க காந்தத்தின் காதல்.... பிரிந்து கொண்டு ஒரு இடத்தில்.. இணைய வேண்டும் என்ற பேராசையோடு... இமைகள் கண்ணை இரவு மூடினாலும்... இனிய நினைவுகள் கொண்டு காலையில் மீண்டு வருவேன் புது முயற்சி செய்ய.... சில நேரங்களில்  நடக்க போகும் நிகழ்வுகளை விட.... அதன் நினைவுகள் இன்னும் வலியை  அதிகம் தருகின்றன....  மனம் இல்லா மனிதர்களின் உணர்வுகள் பேசும் வார்த்தைக்கு கண்கள் பேசும் மொழிகள் சில கண்ணீர் துளிகளாய்... தூரத்து நிலவாக நீ.... உன்னை நோக்கி நான்... வெளிச்சம் பார்த்து காத்திருக்கிறேன்.... என்னோடு எப்போது சேர்வாய் ... ஒருவரின் மாறிய மனம் பேசும்போது.... கடந்த நாட்களின் வார்த்தைகள்  இன்னொரு மனிதனாய் இடை வருகிறது... மாறிய மனத்தை இன்னும்  காயப்படுத்த... சேர் நினைக்கும் போதெல்லாம்  பார்த்து விட்டு செல்கிறேன்.