7 பெண்ணின் காதல் கவிதைகள் - Pennin Kathal Kavithaigal - Antony Kavithaigal
காத்திருந்ததால்
கன்னியாக கணவனுக்கு அவள்...
காலம் காட்டியது ஒரு
காத்திடும் சக்தியாக
அவனை....
கரம் பிடித்தான் கன்னி
பெண்ணை..
காதல் வயப்பட்டு...
காலமெல்லாம் நீடுழி வாழுங்கள் வளமுடன்...
மெல்லிய உடல் உடையவள்..
மெதுவாய் வளைத்து வளர்கிறாய் காற்றுக்கு..
உன் வாழ்வை மொத்தமாய் கொடுக்கிறாய்
அனைவருக்கும்...
முதிர்ச்சி ஆனதும் முளைவிட்டு.
வழி விடுகிறாய்
வருங்காலத்திற்கு...
சுமையான என் வாழ்வில்..
என்னால் பார்க்க மறந்த உலகத்தை
உன் தோல் சாய்ந்து ரசிக்கிறேன்...
துணையாக நீ இருப்பாய் என்று....
உன்னால் உணர்ந்தேன்...
உள்ளத்தால் அன்பானவன் நீ என்று...
உன்னைபோல் யாரும் இல்லை...
சிறு குழந்தையாய் உன்கையில் நான்...
நீதான் என் உலகமே.. எங்கேபோவேன்
நீயின்றி..
காலையில் கண்மூடி கனவு ஒன்று கண்டேன்...
அழகிய புல்தரையில் உலகத்துடன்
உடல் சேர்த்து உள்வாங்குகிறேன்
உயிர் சுவாசத்தை....
தனிமையில் ஒரு இனிமையாய்....
உன்னுடன் உடனிருந்த
நாட்கள் இனிமையே
கொஞ்சி விளையாடினோம்
சிறு குழந்தைகளாய்...
இன்னுமும் ஏங்கி தவிக்கிறது
இந்த மனம்....
கனவும் பொய் என்று கண்டு கொண்டேன்.
கண்கள் கொண்டு உன்னை பார்த்த நொடியில்....
நிஜத்தில்
நீ இருக்கும் போது கனவு பொய் என்று...
Comments
Post a Comment
Thanks for Comment..