8 ஆணின் சோக கவிதைகள் - Aanin Soga Kavithaigal - Antony Kavithaigal
நடந்து செல்லும் பாதையில் நிறம் மாறும் இலைகள்..
நிஜத்தில் மனிதர்கள் போல....
மரங்களின் கிளையில்
எண்ணிகை...
அதன் வளர்ச்சி போல...
மனிதனின்
உறவுகளும் அப்படியே....
விழுவேன் என்று தெரிந்தும் விழுகிறேன்...
உடைந்து போகிறேன்...
மீண்டும் ஆகாயம் செல்வேன்...
மறுபடியும் உடைய..
சிலரின் நினைவை சிந்தித்து சிந்தித்து சிதைந்து சிதறுகிறேன்...
மீண்டும் ஒரு சிந்ததையுடன்....
மறுபடியும் சிதற......
நிஜ வாழ்க்கையில் சில நிழல் நபர்கள்
முதலில் சிரிக்க வைத்து
பின்னர் சிந்திக்க வைத்து கொண்டு செல்கிறார்கள்....
சில நிமிட மனிதர்கள்....
அழகை ரசிக்க தெரிந்த
உங்கள் கண்ணுக்கு....
சிலரின் அழகான இதயம்
தெரியாமல் போகிறது.....
தனி நிலை நீ இருக்கும் பொழுது
ஆபத்து யாவும் அழகாக
தெரியும்...
ஆழம் தெரியாமல்
அழகை ரசிக்க பழகாதே...
வரும் வேதனைகள் உனக்கு மட்டுமே...
தனிமை என்றும் நிலையானது அல்ல...
இரவின் பின் வரும் பகல் போல
ஒரு நாள் உன்னை மாற்றும் நாள் வரும்...
பொறுமையுடன் காத்திரு..
Comments
Post a Comment
Thanks for Comment..